Blogger news

Welcome to myZone and thanks for ur visit ((((ஸ்ரீநிவாஸ்))))

Blogger templates

கருத்து சொன்னா கேட்பீங்களானு தெரியல... இருந்தாலும் சொல்றேன்....
யார் பேச்சை யாருங்க கேட்குறா நீங்க கேட்குறதுக்கு....

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு வசனம் பேச வேண்டாம்... கொஞ்சம் படிச்சுதான் பாருங்க...

சிரிக்காதீங்க...கருத்து சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்குனு கேட்காதீங்க... கருத்து சொல்ல தகுதி இருக்கிரவங்க படிச்சிட்டு யாருக்கு வேணும்னாலும் இந்த கருத்தை சொல்லிட்டு போகட்டுமே.... அதான் சொல்றேன்... வேற ஒண்ணும் இல்ல... இப்ப straightஆ மேட்டருக்கு வாரேன்...

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!!!

    


உங்கள் நண்பருக்கு முதலில் அன்பை கொடுக்க முடியுமா  என்று பாருங்கள்பெறலாம் என்பதை விடுங்கள்.

உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
அன்பை கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது

ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாகதுடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

மன்னிக்க பழகுங்கள்..!!

சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்னமன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லதுஉங்களுக்கும் நல்லது.

தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

சிலர் இருக்கிறார்கள்இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் குத்திகாட்டுவார்கள். அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில்இந்த வகையில் சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொல்லுங்கள்...அப்படி எடுத்து சொல்லியும் கேட்க வில்லையா...விட்டு விடுங்கள்...அவர்களாகவே அடி பட்டு திருந்தட்டும்...அப்பொழுதுதான் உங்கள் சொல்லின் மதிப்பு தெரியும்...

சொன்னதை செய்யுங்கள்..!!

நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.

நட்புக்கேது கட்டுபாடு..!!

உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.

நல்லதுக்கும்கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும்என்கிற பழமொழி இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும். இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

அவர் அவராகவே இருக்கட்டும்..!!

நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது. அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி. என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதாமுடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம் மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர் சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை. எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சாஇனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்குவோம்!! 
அப்பத்தான் விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!



பொறுமையாக வாசித்ததற்கு நன்றிகள் பல....
இன்னும் மற்ற updateகளை கூடிய விரைவில் எதிர்பாருங்கள்......


உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் அன்பு நண்பன் 
ஸ்ரீநிவாசன்.... 
Visit Us @ 
www.MumbaiHangOut.Org

0 comments: