ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை" என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவியாம்!
நான் யார்?
===========
நேற்று நான் யார்?
இன்று நான் யார்?
நாளை நான் யார்?
அவனுக்கு நான் யார்?
அவளுக்கு நான் யார்?
எனக்கே நான் யார்?
புரியவில்லை -தெரிய வில்லை,
தெரிவது போல் தெரிகிறது.
ஆனால் புரியவில்லை
புரிவது போல் புரிகிறது
ஆனால் தெரிய வில்லை.
நேற்று நான் ,புழுவாய் நெளிந்திருப்பேன்.
இன்று நான், மனிதனாய் வந்திருக்கின்றேன்.
நாளை நான் பூண்டாக மாறலாம்.
இதில்
மெய் மட்டும் நானா அல்லது
மெய் கூட பொய்யா.
ஆத்மா மட்டும் நானா அல்லது
ஆத்மா கூட அனர்த்தமா?
புரிய வில்லையே!
எனக்கே நான் யார் என்று
தெரியவில்லை இதில்-
உனக்கு நான் சொந்தமென்றால்
வியப்பாய் இல்லை?
உனக்கே நீ யார் என்று புரிய வில்லை
இதில்-
எனக்கு நீ பந்தமென்றால்
நகைப்பாய் இல்லை?
ஒருவனுக்கு நான் மகன்.
ஒருத்திக்கு நான் தம்பி.
ஒருவனுக்கு நான் மாமன்.
ஒருத்திக்கு நான் மச்சான்.
இருந்து விட்டுப் போகட்டும்.
இறைவனுக்கு நான் யார்?
அது தெரிந்தால் போதும்,
என் ஜென்மம் சாபல்யமாகும்.
அடுத்த ஜென்மத்தில்
உயிரும் மெய்யும்
உவகையுடன் ஒன்றாகும்...
நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடைதலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ
0 comments:
Post a Comment